நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது.
என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன் என்று ஸ்வேதா மேனன் கூறினார்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனனின் பின்புறம் நின்று குறும்பு செய்யும் அந்த நபரின் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment